ஆப்நகரம்

நான் அசிங்க வார்த்தை பேசவில்லை: கதறி கதறி அழுத காயத்ரி!

நான் தவறாக எந்த வார்த்தையும் பேசவில்லை என்று கூறி காயத்ரி ரகுராம் கதறி கதறி அழுதுள்ளார்.

TNN 8 Aug 2017, 11:58 am
நான் தவறாக எந்த வார்த்தையும் பேசவில்லை என்று கூறி காயத்ரி ரகுராம் கதறி கதறி அழுதுள்ளார்.
Samayam Tamil kamal haasan bigg boss tamil episode 43 updates
நான் அசிங்க வார்த்தை பேசவில்லை: கதறி கதறி அழுத காயத்ரி!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் ஓவியா வெளியேற்றப்பட்டார். தற்போது அவரது வழியில் வையாபுரியும் தயாராகி வருகிறார். எனக்கு யாரும் ஓட்டுப்போடாதீங்க என்று மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். தனியாகவும் ஓரங்கட்டப்பட்டு நல்லவராக இருக்கனுமா, நாதராக இருக்கனுமா என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டார். இந்நிலையில், அனைவராலும் வையாபுரி நாமினேட்டுக்கு தேர்வானாலும், அவர்களால் ஒரு காரணமும் கூட சரியாக சொல்லமுடியவில்லை. இந்நிலையில், அனைத்து காராணங்களையும் சரியாக சொல்லி பிக்பாஸ் குடும்பத்தின் தலைவியாக ரைசா தேர்வாகியுள்ளார்.

இதையடுத்து, கிச்சன், கிளீனிங் மற்றும் வாஷிங் டீம் போன்றவற்றிற்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடந்தது. இதில், சினேகன், சக்தி மற்றும் கணேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கிச்சன் டீமுக்கு தலைவராக சினேகன் தேர்வானது காயத்ரிக்கு பிடிக்கவில்லை. மேலும், தலைவி ரைசா ஓயாமல், காயத்ரி தவறான வார்த்தையை பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார். இது, காயத்ரிக்கு கோபத்தை ஏற்படுத்த, கண்ணீர்விட்டு கதறி அழுதார். மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்தி வைத்தனர். இந்நிலையில், கணேஷின் மனைவி மற்றும் சக்தியின் மனைவி போனில் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, ஒன்றாக அமர்ந்திருந்த பிக்பாஸ் குழுவினர் ஜூலியின் ஆட்டோகிராஃபை பற்றி பேசினர். அதில், ஜூலி நன்றி என்று எழுதுவதற்குப் பதிலாக ந்னறி என்று எழுதியிருந்ததை பார்த்து சிரித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்