நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் சக்தி வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் வெளியேற்றப்பட விரும்பும் நபரை சரியான காரணம் கூறி பரிந்துரைக்க வேண்டும் என போட்டியாளர்களிடம் பிக் பாஸ் கூறியிருந்தார். ஆனால் மொத்தம் உள்ள 8 போட்டியாளர்களில் ரைசா மட்டும் சரியான காரணங்களை கூறியதால் அவர் மட்டும் வெளியேற்றப்படும் பட்டியலில் இடம்பெறவில்லை. மற்ற 7 போட்டியாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றனர்.
பின்னர் பிக் பாஸால் காயத்ரி, கணேஷ் வெங்கட்ராமன், பிந்து மாதவி ஆகியோர் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இந்நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர்களில் சினேகன், ஆரவ், சக்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் மக்களின் ஓட்டுகளின் அடிப்படையில் சக்தி வெளியேற்றப்பட்டார்.
மீண்டும் ஓவியா :
சக்தி வெளியேற்றப்பட்ட பின்னர் கமல் கூறும் போது, சிலர் வெளியேற்றப்பட்டனர். சிலர் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் செல்ல வாய்ப்புள்ளது என கூறும் போது, பார்வையாளர்கள் ஓவியா, ஓவியா என ஆர்பரித்தனர். அப்போது, போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த வாரம் வெளியேற்றப்பட விரும்பும் நபரை சரியான காரணம் கூறி பரிந்துரைக்க வேண்டும் என போட்டியாளர்களிடம் பிக் பாஸ் கூறியிருந்தார். ஆனால் மொத்தம் உள்ள 8 போட்டியாளர்களில் ரைசா மட்டும் சரியான காரணங்களை கூறியதால் அவர் மட்டும் வெளியேற்றப்படும் பட்டியலில் இடம்பெறவில்லை. மற்ற 7 போட்டியாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றனர்.
பின்னர் பிக் பாஸால் காயத்ரி, கணேஷ் வெங்கட்ராமன், பிந்து மாதவி ஆகியோர் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இந்நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர்களில் சினேகன், ஆரவ், சக்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் மக்களின் ஓட்டுகளின் அடிப்படையில் சக்தி வெளியேற்றப்பட்டார்.
மீண்டும் ஓவியா :
சக்தி வெளியேற்றப்பட்ட பின்னர் கமல் கூறும் போது, சிலர் வெளியேற்றப்பட்டனர். சிலர் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் செல்ல வாய்ப்புள்ளது என கூறும் போது, பார்வையாளர்கள் ஓவியா, ஓவியா என ஆர்பரித்தனர். அப்போது, போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.