ஆப்நகரம்

பிக் பாஸ் : சுஜா வருணியை புலம்ப வைத்த சினேகன், பிந்து மாதவி

கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இடம்பெற்றுள்ள நடிகை சுஜா வருணியை மற்ற போட்டியாளர்கள் ஒன்றாக சேர்ந்து புலம்ப வைத்துள்ளனர்.

TOI Contributor 18 Aug 2017, 5:40 am
கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இடம்பெற்றுள்ள நடிகை சுஜா வருணியை மற்ற போட்டியாளர்கள் ஒன்றாக சேர்ந்து புலம்ப வைத்துள்ளனர்.
Samayam Tamil kamal haasan bigg boss tamil episode 53 updates
பிக் பாஸ் : சுஜா வருணியை புலம்ப வைத்த சினேகன், பிந்து மாதவி


பிக் பாஸ் வீட்டில் அடுத்தடுத்து ஓவியா, ஜூலி, சக்தி ஆகிய போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் சுவாரஸ்யம் குறைந்துள்ள நிலையில், குற்றம் 23, கிடாரி, பென்சில் உட்பட தமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ள சுஜா வருணி பிக் பாஸில் களமிறக்கியுள்ளனர்.

புலம்பிய சுஜா வருணி :
சுஜா வருணியை ஏமாற்றும் பொருட்டு மற்ற போட்டியாளர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு, சினேகனுக்கும், பிந்து மாதவிக்கும் சண்டை இருப்பது போல நடிக்க ஆரம்பித்தனர்.

பிக் பாஸ் வீட்டில் புதிதாக வந்துள்ளதால் சுஜா வருணிக்கு அவர்களிடையே ஏன் திடீரென சண்டை போடுகின்றனர் என்பது தெரியாமல் புலம்பி தவித்தார்.

பிந்து மாதவி சினேகனிடம் சண்டை போடுவதற்காக, வையாபுரி வசனத்தை கற்றுக்கொடுத்தார். மற்ற நபர்கர்களும், சினேகன், பிந்து மாதவியிடையே சண்டை இருப்பது போல நடித்தனர்.

இதனால் சுஜா வருணி தப்பா பிக் பாஸுக்கு வந்துட்டேனோ என புலம்பி தவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்