ஆப்நகரம்

எமது ரசிகரின் கைது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது: டுவிட்டரில் கமல் காட்டம்

''தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எமது இயக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது செய்யப்பட்டு இருப்பது, என் மீதான அரசியல் வன்முறையைக் கட்டுவதாக இருக்கிறது'' என்று நடிகர் கமல் ஹாசன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 22 Feb 2017, 2:21 pm
''தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எமது இயக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது செய்யப்பட்டு இருப்பது, என் மீதான அரசியல் வன்முறையைக் கட்டுவதாக இருக்கிறது'' என்று நடிகர் கமல் ஹாசன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kamal haasan condemned arrest of his fan sudhakar and others
எமது ரசிகரின் கைது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது: டுவிட்டரில் கமல் காட்டம்


தமிழகத்தில் சமீபத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள் குறித்து தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் குரல் கொடுத்து வருகிறார். பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமிக்கும், கமல் ஹாசனுக்கும் தொடர்ந்து ''டுவிட்டர் வார்'' நடந்து வருகிறது என்றே கூறலாம். இந்நிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தனது நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த சுதாகர் மற்றும் சிலரை போலீசார் கைது செய்து இருப்பதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில், ''இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது.

TN ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது

நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது

எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி போதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர்.நிரந்தரம் நம்நாடு'' என்று தெரிவித்துள்ளார்.

தமிழத்தில் சமீபத்தில் நடந்த அரசியல் மாற்றத்தின்போது, வெளிப்படையாக, தனது ஆதரவை பன்னீர் செல்வத்துக்கு கமல் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan condemned arrest of his fan Sudhakar and others

அடுத்த செய்தி

டிரெண்டிங்