ஆப்நகரம்

கமலை கலங்க வைத்த மரணம்... டிவிட்டரில் உருக்கம்!

ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் காசாளர் மரணத்தால் நடிகர் கமல்ஹாசன் கலங்கிபோயுள்ளார்.

Samayam Tamil 1 Apr 2022, 10:49 am
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தியிலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள கமல் கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார்.
Samayam Tamil Kamal haasan


நடிகராக மட்டுமின்றி இயக்குநர் தயாரிப்பாளர் எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன், 1981ஆம் ஆண்டு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

Dhanush: நம்ப வைத்து கழுத்தறுத்த தனுஷ்... நொறுங்கிப்போன ரஜினி!

இதன் மூலம் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பல படங்களையும் விநியோகம் செய்துள்ளார் கமல், இந்நிலையில் இந்த நிறுவனத்தில் 32 ஆண்டுகளாக காசாளராக பணியாற்றிய முரளி என்பவர் மரணமடைந்துள்ளார்.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். அவர் பதிவிட்டிருப்பதாவது, எங்கள் RKFI நிறுவனத்தில் காசாளராக 32 ஆண்டுகள் பணியாற்றிய எஸ். முரளியை இன்று இழந்துவிட்டோம். அவரது குடும்பத்திற்கும், எங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. மிஸ் யூ முரளி.. நீங்கள் இவ்வளவு சீக்கிரம் விடைபெற்றிருக்க வேண்டியதில்லை.. என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்