ஆப்நகரம்

ரூ.10 கோடி விவகாரம்: ஞானவேல் ராஜா ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை! ராஜ் கமல் நிறுவனம்

கமல்ஹாசனுக்கு, ஞானவேல் ராஜா ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 28 Sep 2019, 10:33 am
‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு சமயத்தில் கமல்ஹாசன் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல், ஞானவேல் ராஜாவிடம் ரூ.10 கோடி வாங்கியது மட்டுமின்றி ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தில் ஒரு படத்தில் நடித்துத் தருவதாக கூறியுள்ளாராம்.
Samayam Tamil kamal


ஆனால் படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கமல் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் தன்னை ஏமாற்றி வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.

kaappaan 'சூர்யா எங்கள் நம்பிக்கை' : காவிரி விவசாயிகள் சங்கம்

இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'உத்தம வில்லன் வெளியான நேரத்தில் ஞானவேல் ராஜா, கமல்ஹாசனுக்கு பத்து கோடி ரூபாய் கொடுத்ததாக பரப்பப்படும் வதந்திகளை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. ஞானவேல் ராஜா கமலுக்குப் பணம் கொடுத்தார் என்பது அப்பட்டமான பொய், ஒரு ரூபாய் கூட அவர் கமல்ஹாசனுக்குக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

இந்த வதந்திகள் கமல்ஹாசனின் மதிப்பை கெடுப்பதற்காகவே பரப்பப்படுகின்றன. கமல்ஹாசனின் மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாராகி வருகிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்