ஆப்நகரம்

மீண்டும் டாஸ்மாக்: குமுறும் கமல், கவிதையால் விளாசும் வைரமுத்து

டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது குறித்து கமல் ஹாஸன், வைரமுத்து உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 5 May 2020, 11:28 am
கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருந்தபோது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கில் அதிகரிக்கும்போது மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil kamal haasan


இது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு என்று கேட்டுள்ளார்.
மேலும் டாஸ்மாக் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து ட்வீட்டியிருப்பதாவது,

மது என்பது -
அரசுக்கு வரவு;
அருந்துவோர் செலவு.

மனைவிக்குச் சக்களத்தி;
மானத்தின் சத்ரு.

சந்தோஷக் குத்தகை;
சாவின் ஒத்திகை.

ஆனால்,
என்ன பண்ணும் என் தமிழ்
மதுக்கடைகளின்
நீண்ட வரிசையால்
நிராகரிக்கப்படும்போது?
#TASMAC #Tamil #TamilNadu #Corona என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது,

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பது ஆபத்தான ஐடியா. இதனால் பெரிய பிரச்சனை ஏற்படக்கூடும். தயவு செய்து டாஸ்மாக்கை திறப்பதை தள்ளிப் போடவும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவசரபட்டுட்டேனே, என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷ பட்டுட்டேனே: கஸ்தூரி வேதனை

அடுத்த செய்தி

டிரெண்டிங்