ஆப்நகரம்

ஒரு நாளுக்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட கமல்! அதிர்ச்சியடைந்த நிறுவனம்!

பிக்பாஸ் சீசன் 3ஐ தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசன், சம்பளமாக ஒரு நாளைக்கு 1 கோடி வீதம் 100 நாளுக்கு 100 கோடி கேட்டதையடுத்து தயாரிப்பு நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

Samayam Tamil 12 Apr 2019, 3:27 pm
2017 ஜூன் 25ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் தொடங்கி அது 100 நாட்கள் வரை நடந்தது. அடுத்ததாக இரண்டாம் பாம் அதே டிவியில் 2018, ஜூன் 17ல் தொடங்கி அதுவும் 100 நாட்கள் நடைபெற்றது. இந்த இரு நிகழ்ச்சிகளையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
Samayam Tamil kamal


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது இந்தாண்டு ஒளிபரப்பாகவுள்ளது. அது மீண்டும் விஜய் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகும் என்றும் இம்முறை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இம்முறையும் விஜய் தொலைக்காட்சியே அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறதாம்.

அதே போல் அந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவிருக்கிறாராம். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தில், ஒரு நாளுக்கு ஒரு கோடி வீதம் நூறு கோடி சம்பளம் வேண்டுமென்று கமல் கேட்டாராம்.

இதனால் தொலைக்காட்சி நிறுவனம் அதிர்ச்சியடைந்ததாக உடன் இருந்தவர்கள் சொல்கிறார்கள். கடைசியில் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்