ஆப்நகரம்

Kamal Haasan: இன்று விஜய் சேதுபதி என் காலில் விழுந்தார்.. நாளை.?: ஆண்டவரின் மாஸ் பேச்சு.!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 26 Nov 2022, 8:11 am
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். திரையிலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
Samayam Tamil கமல் - விஜய்
கமல் - விஜய்


ஹீரோவாக மட்டுமல்லாமல் தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களையும் தேர்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் வெளியான கமலின் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதியின் மிரட்டலான வில்லன் வேடம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்திற்கு ’டிஎஸ்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Naai Sekar Returns: வைகைப்புயலின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்: கலக்கலாய் வெளியான அறிவிப்பு.!

இவ்விழாவில் பேசிய கமல், "என்னைப் போலவே விஜய்சேதுபதி சினிமா நேசர். நான் மார்லன் பிராண்டோ முன்பு மண்டியிட்டு அவரது கையில் முத்தமிடுவேன். அப்படித்தான் இன்று விஜய்சேதுபதி என் முன் காலில் விழுந்தார். நாளை விஜய் சேதுபதி முன்பு காலில் விழ வேறொரு கலைஞன் வருவான்". என பேசியுள்ளார்.

தொடர் தோல்வியிலிருந்து தப்பித்தாரா சந்தானம்: 'ஏஜென்ட் கண்ணாயிரம்' பட விமர்சனம்.!

மேலும், நான் நலமாகவே இருக்கிறேன். இருமல்தான் வேறொன்றுமில்லை. முந்தியெல்லாம் பெரிய விபத்து நடக்கும் பொழுது கூட அடுத்து என்னை பார்த்தால் அடுத்த எப்போ படம் ரிலீஸ்? எப்போ ஷூட்டிங் என்று கேட்பார்கள். ஆனால் இப்போது இருமல் தான். மிகப்பெரிய செய்திகள் எல்லாம் எனக்கு வருகிறது. இதற்கு காரணம் ஒன்று ஊடகம், இன்னொன்று பெருகி இருக்கும் அன்பு என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்