ஆப்நகரம்

அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி, கமல் யோசித்தால் நாட்டுக்கு நல்லது: கவுதமி

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் யோசித்து முடிவெடுத்தால் நாட்டுக்கு நல்லது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

TNN 26 Jul 2017, 3:02 pm
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் யோசித்து முடிவெடுத்தால் நாட்டுக்கு நல்லது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kamalhaasan and rajinikanth will take good decision about their politics to people says actress gautami
அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி, கமல் யோசித்தால் நாட்டுக்கு நல்லது: கவுதமி


ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவார்களா? என்பது தான் இப்போதைய டிரெண்டிங். இவர்களது அரசியல் பிரவேசம் குறித்து நடிகை கவுதமி கூறுகையில், நாட்டில் நல்ல விஷங்களும், கெட்ட விஷங்களும் இருக்கத்தான் செய்கிறது. தப்பு செய்கிறவர்களும், நல்லது செய்கிறவர்களும் ஒரே இடத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து பேசுவது அவருடைய சொந்த கருத்து.

அதில் யாரும் தலையிட முடியாது. அரசியல் குறித்து கருத்து கூற அவருக்கு உரிமை உள்ளது. அவர் கூறும் கருத்துக்களை நான் தவறு என்று ஒரு போதும் சொல்ல மாட்டேன். அரசியலுக்கு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், யார் அரசியலுக்கு வந்தாலும், அவர்கள் என்ன கருத்தோடும், கொள்கையோடும் வருகிறார்கள், என்ன பிரச்சனைகளை முன்வைக்கிறார்கள் என்பதை குடிமகள் என்ற முறையில் கவனிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்