ஆப்நகரம்

ஆசையில் வரவில்லை: அன்பில் வருகிறேன்! கண்ணீர் மல்க கமல் பேச்சு!

பிக்பாஸ் போட்டியில் இறுதி நாளில் ஆசையில் வரவில்லை, அன்பிற்காக வருகிறேன் என்று தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

TNN 1 Oct 2017, 1:14 am
பிக்பாஸ் போட்டியில் இறுதி நாளில் ஆசையில் வரவில்லை, அன்பிற்காக வருகிறேன் என்று தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kamalhaasans political speech in biggboss tamil season1 grand finale
ஆசையில் வரவில்லை: அன்பில் வருகிறேன்! கண்ணீர் மல்க கமல் பேச்சு!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 100 நாள்…100 வேக்கப் சாங்கஸ்….100 எபிசோடு வரை முழுவதும் தாக்குப் பிடித்து அனைத்து டாஸ்க்குகளையும் வெற்றிகரமாக முடித்து பொறுமை காத்த ஆரவ் வெற்றி பெற்றதாக கமல்ஹாசன் அறித்தார். அவருக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக, தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து கமல்ஹாசன் கண்ணீர் மல்க பேசினார். நான் ஆசையில் வரவில்லை என்றும், அன்பிற்காக வருகிறேன், கடமையில் வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், உங்கள வேலை தான் என்னுடைய கடமை, என்னுடைய வாழ்வு. நீங்கள் என்னை நடிக்கச் சொன்னால் நான் நடிக்கிறேன். இல்லை உனக்கு வேற வேலை கொடுத்திருக்கிறோம் அல்லவா, அதனை செய் என்றாலும் செய்கிறேன் என்றார். மேலும், இல்லை வேறு யாரேனும் வந்தாலும், அவர்களுக்கு சேவகம் செய்கிறேன் என்று கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் தன்னுடைய பாடலான அண்ணாத்த ஆடுறாரு பாடலுக்கு அற்புதமாகவும், உற்சாகமாவும் டான்ஸ் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்