ஆப்நகரம்

நிறைவடைந்த சிவகார்த்திகேயனின் ‘கனா’!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வந்த ‘கனா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

Samayam Tamil 18 Jul 2018, 5:26 pm
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வந்த ‘கனா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
Samayam Tamil kana


அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கானா’. இந்தப் படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. கிரிக்கெட் வீராங்கனையாக ஆக விரும்பும் மகளுக்கும், அவரை நிறைவேற்றி இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை.

அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘மரகதநாணயம்’ இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். படத்தின் ஆடியோ உரிமையை சோனி கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கலையரசு என்பவர் தயாரித்து வருகிறார்.

‘கனா’ என்ற தலைப்புக்கு கீழே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என டேக்லைன் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், ’கனா’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நேற்று முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்