ஆப்நகரம்

தந்தை பெரியார் சிலை விவகாரம்.. கைதாகும் கனல் கண்ணன்.?: நீதிமன்றம் அதிரடி.!

தந்தை பெரியார் சிலை குறித்து பேசிய விவகாரத்தில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Aug 2022, 7:29 am
இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை மதுரவாயலில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள தந்தைபெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியிருந்தது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil கனல் கண்ணன்
கனல் கண்ணன்


தந்தை பெரியாரின் சிலை குறித்த கனல் கண்ணனின் இந்த பேச்சினுடைய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதற்குள் தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேசிய கனல் கண்ணன் தலைமறைவானர். மேலும் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படத்திற்காக இணையும் ரஜினி, கமல்: மணிரத்னத்தின் மெஹா பிளான்.!

இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் எந்நேரமும் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைதான கனல் கண்ணனை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்