ஆப்நகரம்

மின்வெட்டு பிரச்சனையை குறிவைக்கும் கனவு வாரியம்!!!

தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக வைத்து தயாராகி வருகிறது கனவு வாரியம்.

TNN 21 Feb 2017, 1:55 pm
தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக வைத்து தயாராகி வருகிறது கனவு வாரியம். உலக சினிமாவில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான ரெமி விருது உள்பட 7 சர்வதேச விருதுகளை வென்ற படம். அருண் சிதம்பரம் ஹீரோவாகவும், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, படத்தை இயக்கவும் செய்திருக்கிறார்.
Samayam Tamil kanavu variyam is based on powercuts
மின்வெட்டு பிரச்சனையை குறிவைக்கும் கனவு வாரியம்!!!


இப்படம் பற்றி இவர் கூறுகையில், எட்டாம் வகுப்பு வரை படித்த கிராமத்து இளைஞனாக வருபவர் எழில். கிராமத்தில் நிலவும் மின்வெட்டால் பாதிக்கப்படுகிறான். அவதிலிருந்து வருவதற்கு அவன் என்ன செய்தான் என்பது படத்தின் கதை. லவ், வில்லேஜ், சைன்ஸ் போன்றவற்றை கலந்து காதல் நகைச்சுவையோடு உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் ஜியா சங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். வீணா என்ற ரோலில் கிராமத்திலிருந்து சிட்டிக்கு செல்லும் படித்த பெண்ணாக நடித்துள்ளார். யாரையும் சார்ந்திருக்காமல் நம் தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற கருவை அடிப்படையாக வைத்து பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்