ஆப்நகரம்

‘காஞ்சனா 3’:நடிகை ஓவியாவை வைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்திய லாரன்ஸ்!

‘காஞ்சனா 3’யில் நடிகை ஓவியாவின் காட்சிகள் திருப்தியில்லாததால் நடிகர் ராகவா லாரன்ஸ் மீண்டும் படப்பிடிப்பை நடத்தி சில காட்சிகளை படமாக்கினார்.

Samayam Tamil 7 Mar 2019, 5:36 pm
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘காஞ்சனா 3’. இந்தப் படத்தில் நடிகை ஓவியா நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. ஏற்கெனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த விட்டது.
Samayam Tamil kanchana3


இந்தப் படத்தை வரும் ஏப்ரல் 18ம் தேதி வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருந்தது. அதன்பின் ஏப்ரல் 12 அன்றே வெளியாகும் என்று சொன்னார்கள். இப்போது அதிலும் மாற்றம் வந்திருக்கிறதாம். அந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

முடிந்த படத்தைப் போட்டுப் பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸுக்கு முழு திருப்தி இல்லையாம். ஆகையால் அண்மையில் நடிகை ஓவியாவை வைத்து சில நாட்கள் மறு படப்பிடிப்பை நடத்தியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

அதைத் தொகுத்துப் பார்த்துவிட்டு அப்போதும் திருப்தியடையாத ராகவா லாரன்ஸ், இன்னும் வேலை இருக்கிறது, எனவே ஏப்ரல் 12 இல் வெளியிடுகிற மாதிரி படத்தைத் தர இயலாது என்று சொல்லிவிட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம், வேறு வழியில்லாமல் வெளியீட்டுத் தேதியை மாற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்