ஆப்நகரம்

படக்குழுவினரால் பல துன்புறுத்தல்களுக்கு ஆளான கங்கனா ரணாவத்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், படக்குழுவினரால் பல துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Jan 2019, 4:05 pm
பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகை கங்கனா ரணாவத். மேலும் இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை இவர்தான். சமீபத்தில் இவர் பெயர் காதல், மீடூ என சில சர்ச்சைகளில் அடிக்கடி இடம் பிடித்து விடுகிறது.
Samayam Tamil manikarnika


தற்போது அவர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மணிகர்னிகா’. இந்தப் படத்தில் கங்கனா ராணியாக நடித்துள்ளார். இந்தப் படம் இந்த மாதம் 25ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அவர் படக்குழுவினரால் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார். இதில் அவர் படப்பிடிப்பு தளத்தில் சில நடிகர்கள் ஈகோவுடன் நடந்துகொண்டார்கள்.

6 மணி நேரத்திற்கு மேல் காக்க வைப்பது, தவறான நேரத்தில் ஸ்பாட்டுக்கு அழைத்து வர செய்து காக்க வைப்பது, கால்ஷூட் தேதிகளை தவறாக கொடுத்து வாய்ப்புகளை தவற செய்ய வைப்பது, படப்பிடிப்பை கடைசி நேரத்தில் கேன்சல் செய்துள்ளனர். மேலும் அவருக்கே தெரியாமல் வேறு ஒருவரை வைத்து அவர் வாயஸில் டப்பிங் செய்வது, பட விழாக்களுக்கு தன்னை அழைக்காமல் டிரெய்லரை வெளியிடுவது என பல துன்புறுத்தல்களை சந்தித்துள்ளாராம் கங்கனா ரணாவத்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்