ஆப்நகரம்

தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருக்கும் ‘மணிகர்னிகா’ படம்!

சம்பள பாக்கியை கொடுக்காவிட்டால் ‘மணிகர்னிகா’ படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தினர் புகார் கூறி வருகின்றனர்.

Samayam Tamil 5 Dec 2018, 6:05 pm
சம்பள பாக்கியை கொடுக்காவிட்டால் ‘மணிகர்னிகா’ படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தினர் புகார் கூறி வருகின்றனர்.
Samayam Tamil manikarnika


பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மணிகர்னிகா’. இந்தப் படத்தில் ஜான்சிராணியாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. குறுகிய தலைமுடி, தலையில் முண்டாசு, தோடு, மூக்குத்தி அணிந்து வாளுடன் கம்பீரமாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர்.

‘பத்மாவத்’ படம் போல் ‘மணிகர்னிகா’ படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இந்நிலையில் இயக்குனர் கிரிஷ் தெலுங்கில் பிஸியாக இருப்பதால் ஒரு சில காட்சிகளை நடிகை கங்கனா ரணாவத்தே படமாக்கி வந்தார். படப்பிடிப்பில் கங்கனா ரணாவத்துக்கும், சக நடிகருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் துணை நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை. இவர்களுக்கு ரூ.1.5 கோடி சம்பள பாக்கி உள்ளது என்றும், அந்த தொகையை கொடுக்காமல் படத்தை திரைக்கு கொண்டுவர அனுமதிக்க கூடாது என்று இந்திய சினிமா, டி.வி. தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்