ஆப்நகரம்

பிரபல நடிகரின் மனைவிகள் அடிதடி; செருப்பால் தாக்கிக் கொண்ட கொடூரம்!

பெங்களூரு: பிரபல நடிகர் ஒருவரின் மனைவிகள் செருப்பால் தாக்கி சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Oct 2018, 1:36 pm
கன்னட நடிகர் துனியா விஜய்க்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியே வசித்து வருகிறார். கடந்த 2016ல் மாடல் அழகி கீர்த்தி கவுடாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
Samayam Tamil Duniya Vijay


இரு மனைவிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு, முதல் மனைவி நாகரத்னா தனது மகளுடன் சென்றார். அங்கு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் கீர்த்தி கவுடாவை, நாகரத்னா செருப்பால் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவான நாகரத்னாவை தேடி வருகின்றனர். இந்நிலையில் போலீசாரிடம் சென்ற நடிகர் துனியா விஜய், தனது மகள்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஏனெனில் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இரு மனைவிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டை, துனியா விஜய்க்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்