ஆப்நகரம்

யார் கண்ணிலும் தென்படாத இடத்துக்குச் செல்லும் பிரபல நடிகை!

விடுமுறையை கழிக்க யார் கண்ணிலும் தென்படாத இடத்துக்குச் செல்லவுள்ளேன் என்று பிரபல நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.

Samayam Tamil 9 Mar 2018, 5:56 pm
விடுமுறையை கழிக்க யார் கண்ணிலும் தென்படாத இடத்துக்குச் செல்லவுள்ளேன் என்று பிரபல நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.
Samayam Tamil kareena kapoor plan to celebrate his vacation
யார் கண்ணிலும் தென்படாத இடத்துக்குச் செல்லும் பிரபல நடிகை!


பாலிவுட் நடிகை கரீனா கபூர் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்குப் பின்னும் பல படங்களில் நடித்தார். கர்ப்பமடைந்த பின் சிறிது காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து வந்தார். பின், குழந்தை பிறந்ததும், நடிப்பில் மீண்டும் முழு கவனம் செலுத்தினார். ஓய்வில்லாத நடிப்பும், வெளிப்புற படப்பிடிப்பும், கரீனாவை, ரொம்பவே களைப்பாக்கி விட்டது.

தற்போது, அவர் ‘வீர் தி வெட்டிங்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், கோடை விடுமுறையை கழிக்க, கணவர், சயீப் அலி கான், மகன் தைமூருடன் வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளார், கரீனா கபூர்.

இதுகுறித்து கரீனா கூறுகையில், ‘‘அடுத்த ஒரு மாதத்துக்கு, என்னை இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது. வெளிநாட்டிலும், யார் கண்ணிலும் தென்படாத ஓர் இடத்தில், கணவர், குழந்தையுடன், விடுமுறையை கழிக்கப் போகிறேன்’’ என்கிறார், கரீனா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்