ஆப்நகரம்

கர்ணன் படத்தின் கதை சர்ச்சை: இயக்குனர் விளக்கம்

கர்ணன் படத்தின் கதை கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரம் பற்றியது என கிளம்பிய சர்ச்சைக்கு இயக்குனர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 6 Mar 2020, 12:11 pm
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். அது நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்து அவர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தினை இயக்கி வருகிறார். இதன் 90 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது என சில வாரங்கள் முன்பு தனுஷ் கூறியிருந்தார்.
Samayam Tamil Karnan Dhanush


கர்ணன் படத்தின் கதை 1995ல் நடந்த கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது என சர்ச்சை சமீபத்தில் கிளம்பியது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் ஷூட்டிங் நடத்தவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகரும் எம்.எல்.ஏ-வுமான நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்ணன் படத்திற்க்கு தடை விதித்து, இயக்குனர் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது முக்குலத்தோர் புலிப்படை.

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். இது கொடியன்குளம் ஜாதி வன்முறை பற்றிய படம் அல்ல என கூறியுள்ளார். இதன் மூலம் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதற்கு முன்பே இந்த படத்திற்க்கு கர்ணன் என பெயர் வைக்கக் கூடாது என சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படத்தின் பெயரை இப்போது பயன்படுத்துவது சரியல்ல என தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார் சிவாஜி ரசிகர் மன்றத்தின் தலைவர்.

கர்ணன் என்ற தலைப்புக்கு முன் அல்லது பின் வேறு ஏதாவது வார்த்தை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது பற்றி தற்போது வரை தயாரிப்பாளர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்