ஆப்நகரம்

தனுஷ் கொடுத்த முக்கிய அப்டேட் ; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் தனுஷ் கொடுத்த அப்டேட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Samayam Tamil 24 Feb 2020, 1:54 pm
நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் கணக்கில் கர்ணன் படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Samayam Tamil dhanush


நடிகர் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடித்து வரும் திரைப்படம் கர்ணன். இது தென் தமிழகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை பற்றிய படம் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த படத்தைப் பற்றிய அப்டேட்டை தனுஷ் வெளியிட்டுள்ளார். அதாவது கர்ணன் படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது ட்விட்டில் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளதாவது ,


கர்ணன் படத்தின் ஷூட்டிங் திட்டமிட்டபடி, 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாகவும், இன்னும் 10 சதவிகித படப்பிடிப்பு அடுத்த கட்டமாக நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

கர்ணன் படம் மாஞ்சோலை கதைக்களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால், இது மாஞ்சோலை குறித்த படம் அல்ல எனவும், கொடியன் குளம் கிராமத்தில் நடிந்த சாதி மோதல் பற்றிய படம் எனவும் பின்னர் தெரியவந்தது.

சில சாதி அமைப்புகளிடமிருந்து பிரச்சனை வந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தன் பாணியில் படத்தை எடுத்து வருகிறார் மாரி செல்வராஜ். முன்னதாக படம் மார்ச்சில் நிறைவடையும் என நடிகர் லால் ட்விட் செய்திருந்தார். போகிற ஸ்பீடை பாத்தா படத்தை விரைவில் முடிச்சிடுவாங்க போலிருக்கே என தனுஷ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்