ஆப்நகரம்

ஓடிடி பக்கம் திரும்பிய 'சுல்தான்' - மாஸ்டர் காரணமா?

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' திரைப்படம் பொங்கலுக்கு ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Dec 2020, 8:52 pm
ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் சுல்தான். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் - மெர்வின் இசையமைக்க ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
Samayam Tamil karthi sultan


பொங்கலுக்கு விஜய் நடிக்கும் மாஸ்டர் வெளியாகவுள்ள நிலையில் அதனோடு சிம்புவின் ஈஸ்வரன், கார்த்தியின் சுல்தான் ஆகிய படங்களும் வெளியாகுமென கூறப்பட்டது. குறிப்பாக ஈஸ்வரன் வெளியாகும் என்றனர். இதில் சுல்தான் படக்குழு என்ன முடிவெடுக்குமென பரவலாக கேள்வி எழுந்தது.

கார்த்தியின் சகோதரர் சூர்யா நடித்த சூரரைப் போற்று ஓடிடி-யில் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. ஒருவேளை திரையரங்குகள் கிடைக்காவிட்டால் கார்த்தியும் அதேபாணியில் படத்தை ஓடிடி-யில் வெளியிடலாமென சொல்லப்பட்டது.

தமிழ் சினிமாவில் எப்போதோ நிகழும் அபூர்வம் - செல்வராகவனுக்கு கிடைத்தது எப்படி?

இந்நிலையில், சுல்தான் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகவதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாவதால் பெரும்பாலான திரையரங்கங்கள் அப்படத்தையே திரையிடும். இதனால் பிற படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது சவாலாக இருக்கும்.

இந்த சிக்கலை தவிர்ப்பதற்காகவும், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இன்னமும் தியேட்டர்கள் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாததால் சுல்தான் படக்குழு அதிரடியாக இம்முடிவில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. ஏற்கெனவே ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி, ஜெயம் ரவி நடித்துள்ள பூமி ஆகிய படங்கள் ஓடிடி ரேஸில் இணைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்