ஆப்நகரம்

கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கார்த்திக் நரேனின் டுவிட்!

இயக்குநர் கார்த்திக் நரேனின் டுவிட் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Samayam Tamil 28 Mar 2018, 5:20 pm
இயக்குநர் கார்த்திக் நரேனின் டுவிட் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
Samayam Tamil karthick-naren


கோலிவுட் சினிமாவில் ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். தற்போது இவர் ‘நரகாசூரன்’ என்ற படத்தை அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா ஆகியோரை வைத்து இயக்கி வருகிறார். அடுத்ததாக அவர் ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில், கார்த்திக் நரேன் டுவிட் ஒன்றை பதிவுட்டுள்ளார். அந்த டுவிட் கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும்.

ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என கார்த்திக் நரேன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி இயக்குனர் கவுதம் மேனன் பதிவிட்ட பிறகு தான் தெரிந்தது கார்த்திக் நரேன் பதிவிட்டது இவரை பற்றிதான் என்று. இருவரும் தற்போது மாறி மாறி ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“பலர் என்னிடம் கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் குப்பை போல நடத்தினீர்கள். தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்” என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்