ஆப்நகரம்

சாதி வெறியர்களே நீங்கள் வெட்கப்பட வேண்டும்: கார்த்திக் சுப்புராஜ் ஆதங்கம்!!

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சாதிவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் டுவீட் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 31 May 2018, 2:03 pm
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சாதிவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் டுவீட் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil Karthik-Subbaraj-next-is-titled-as


சிவகங்கை மாவட்டம்திருப்பாசேத்தி அருகே உள்ளகச்சநத்தம் கிராமத்தில், இருசாதி பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆதிக்க சாதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்கடந்த 28ஆம் தேதி தலித் கிராமங்களுக்குள் நுழைந்து சூறையாடினர்.

இந்த மோதலில் தலித் இனத்தைச் சேர்ந்த 8 பேரை ஆதிக்க சாதி இளைஞர்கள் அரிவாளால் வெட்டியதாக செய்தி வெளியானது. இந்த மோதலில் ஆறுமுகம் என்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துமவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் டுவீட் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட டுவீட்டில், ''சிவகங்கை மற்றும் கேரளாவில் நடைபெற்ற கொலைகள் நமக்கு மிகவும் அழுத்தமான பாடத்தை உணர்த்தி இருக்கிறது. நமது நாட்டில் எப்படி சாதி வலுவாக உள்ளது என்பதை இந்த சம்பவங்கள் உணர்த்துகிறது. இந்த சாதிய வெறி பல கொடூரமான, மிருகத்தனமான கொலைகளுக்கு காரணமாகிறது. சாதி வெறியர்களே நீங்கள் இதற்கு வெட்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்