ஆப்நகரம்

ஸ்டிரைக்கிற்கு பிறகு வெளியாகும் மெர்க்குரி !

ஸ்டிரைக்கிற்கு பிறகு ரிலீஸாகும் முதல்படம் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரியாகும்.

Samayam Tamil 19 Apr 2018, 1:04 pm
ஸ்டிரைக்கிற்கு பிறகு ரிலீஸாகும் முதல்படம் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரியாகும்.
Samayam Tamil karthik subbarajs mercury a silent thriller hit the screens
ஸ்டிரைக்கிற்கு பிறகு வெளியாகும் மெர்க்குரி !


தமிழக சினிமா சங்கத்தினா் கடந்த 45 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அரசின் தலையீட்டால் இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துள்ளது. படங்களின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் கூடி விவாதித்து படங்களின் ரிலீஸை அறிவிக்க உள்ளது.

இதனிடையே நடிகர் விஷால் தன் டுவிட்டரில், திரையுலகினரின் வேலைநிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ், இயக்கத்தில் உருவான மெர்க்குரி படம் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.

மெர்க்குரி படம் ஏற்கனவே தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ரிலீஸாகிவிட்டது. படம் வெளியான உடனேயே பைரஸியும் வந்துவிட்டதால் மெர்க்குரி படம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. அதை தடுக்கும்பொருட்டு மெர்க்குரி படத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் விஷால்.

வித்யசமான கதை பின்னணியில் எப்போதும்திரைப்படங்களை இயக்குபவர் கார்த்திக் சுப்புராஜ். இறைவி, பீட்சா, சூது கவ்வும் , போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவா் ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்