ஆப்நகரம்

இயக்குனர் ஜீத்து ஜோசப்புடன் கைகோர்க்கும் நடிகர் கார்த்தி!

நடிகர் கார்த்திக், ‘தேவ்’ படத்தை அடுத்து பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 8 Oct 2018, 5:41 pm
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இந்தப் படத்தை அடுத்து நடிகர் கார்த்தி, அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் ‘தேவ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் இரண்டாவது முறையாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடைபெற்று வந்தது. திடீரென்று அங்கு பலத்த மழை பெய்வதால் தற்போது புனேவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Samayam Tamil karthi


நடிகர் கார்த்தி ‘தேவ்’ படத்தை அடுத்து, ‘த்ரிஷ்யம்’ படத்தின் இயக்குநரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் ஜீத்து ஜோசப், சுரேஷ் கோபியை வைத்து ‘டிடெக்டிவ்’ படத்தின் மூலம் இயக்குநரான அறிமுகமானார். இதையடுத்து, ‘மெமரீஸ்’, ‘த்ரிஷ்யம்’, ‘பாபநாசம்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

கார்த்தி, ஜீத்து ஜோசப் இணையும் புதிய படத்தை வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்