ஆப்நகரம்

Sultan பாஜக, சிவசேனா போராட்டம்: பாதியில் நிறுத்தப்பட்ட கார்த்தியின் சுல்தான் ஷூட்டிங்

கார்த்தி நடித்து வரும் சுல்தான் திரைப்படத்திற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 25 Sep 2019, 1:01 pm
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் சுல்தான். திப்பு சுல்தான் பற்றிய கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் நடைபெற்று இந்த படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொண்டார்.
Samayam Tamil karthi


தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலைக்கோட்டையில் மாதந்தோறும் சிவனடியார்கள் கிரிவலம் வந்தனர். ஆனால் அதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவனடியார்களுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டு படப்பிடிப்பிற்கு மட்டும் அனுமதி கொடுத்ததை எதிர்த்து இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் மலைக்கோட்டையை முற்றுகையிட்டனர்.

பிகில் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்கள்: விளக்கம் அளித்த விவேக்

இது குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், காவல் துறை அதிகாரிகளிடம், கிரிவலம் செல்ல அனுமதி இல்லாத போது படப்பிடிப்பிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

'ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கணும்': பார்த்திபன்

இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, மலைக்கோட்டையில் இருந்து படக் குழுவினர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் சென்ற பிறகே அக்கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கார்த்தியின் சுல்தான் படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் வேறு ஒரு இடத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்