ஆப்நகரம்

பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய சுல்தான்: ரிலீஸ் எப்போ தெரியுமா?

கார்த்தியின் சுல்தான் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவில்லையாம்.

Samayam Tamil 29 Dec 2020, 10:31 am
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள சுல்தானில் கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது தான் ரஷ்மிகா நடித்துள்ள முதல் தமிழ் படம் ஆகும்.
Samayam Tamil sulthan


கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக படப்பிடிப்பை நடத்த முடியாமல் இருந்தது. மீண்டும் படப்பிடிப்பை நடத்த மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்ததும் சுல்தான் படப்பிடிப்பை நடத்தி முடித்தார்கள். அதை பார்த்த ரசிகர்கள் சுல்தான் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று எதிர்பார்த்தனர்.

விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் சுல்தான் ஓடிடியில் வெளியாகும் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் சுல்தான் ஓடிடியில் வெளியாகவில்லையாம். சுல்தானை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

மாஸ்டர் வந்தாலும் பரவாயில்லை என்று சுல்தானும் சேர்ந்து வருவார் என்று நினைத்த நிலையில் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியுள்ளது. சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது.

பொங்கலுக்கு மாஸ்டர் வருவதால் பிற நடிகர்களின் படங்கள் எதுவும் வரவில்லை. ஆனால் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. ஈஸ்வரன் ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் விவகாரம்: முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசிய விஜய்

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் கடந்த மாதம் தான் திறக்கப்பட்டன. ஆனால் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இருக்கைகளின் எண்ணிக்கை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்துமாறு தியேட்டர் உரிமையாளர்களும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விஜய் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் அனுமதி அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்