ஆப்நகரம்

#MeToo பணக்காரர்கள் பிரச்சினை: கரு.பழனியப்பன் பேச்சு

#MeToo என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதை அவர்களே பேசித் தீர்த்துக்கொள்வார்கள் என்று விமர்சித்தார்.

Samayam Tamil 31 Oct 2018, 10:47 am
#MeToo பிரச்சினை இரண்டு பணக்காரர்கள் சம்மந்தப்பட்டது என இயக்குநர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.
Samayam Tamil maxresdefault


அக்கூஸ் புரொடக்ஷன் சார்பில் பி.டி.சையது முகமது தயாரித்துள்ள படம் 'ராஜாவுக்கு ராஜா'. இப்படத்தை ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கேஷ், கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் பேசிய கரு.பழனியப்பன், “இன்று #MeToo பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? #MeToo என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதை அவர்களே பேசித் தீர்த்துக்கொள்வார்கள். எந்த ஊடகமாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு, எளிய மக்களுக்கு எங்கு பார்த்தாலும் இதேபோன்ற கொடுமைகள் நடப்பது பற்றிப் பேசுவதுண்டா?” எனக் கேள்வி எழுப்பினார்.

“சினிமாவை பொழுதுபோக்கு என்று பார்த்த காலம் போய் இன்று சினிமாக்காரர்களின் வாழ்க்கை, மக்களுக்குப் பொழுதுபோக்காக மாறிவிட்டது. #MeToo விஷயத்தில் எது பொய்? எது உண்மை? என்பதே தெரியவில்லை. சினிமாவில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. அவை எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்துள்ளன. #MeToo பிரச்சினை தீராது. சங்கம்தான் தீர்வைத் தேடித்தரும். பிரச்சினை இருந்தால் சங்கத்தை அணுகலாம். அதை விட்டுவிட்டு நமக்கு நாமே சினிமாவைக் கேவலப்படுத்தக் கூடாது. சினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது” என்றும் விமர்சித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்