ஆப்நகரம்

கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர்: விஜயகுமார் உருக்கம்!

கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்றும் நடிகர் விஜயகுமார் உருக்கமுடன் கூறினார்.

Samayam Tamil 11 Aug 2018, 4:07 pm
கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்றும் நடிகர் விஜயகுமார் உருக்கமுடன் கூறினார்.
Samayam Tamil Master
கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர்: விஜயகுமார் உருக்கம்!


மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், இன்று நான்காவது நாளாக ஏராளமான பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வெளியூர்களில் இருந்தும் பலர் அஞ்சலி செலுத்த மெரினா கடற்கரைக்கு வந்த வண்ணமாக உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஜயக்குமார், இயக்குநர் ஹரி மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று காலை கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர், அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்