ஆப்நகரம்

புரோகிதரே பொறுக்கித்தனமாக நடந்து கொண்டால் என்ன பயன்?: கஸ்தூரி காட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில், பெண்ணை தாக்கிய தீட்சிதர் குறித்து கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.

Samayam Tamil 18 Nov 2019, 10:29 am
சிதம்பரத்தை சேர்ந்தவர் லதா. இவர் கடந்த சனிக்கிழமை அன்று அப்பகுதியில் உள்ள நடராஜர் கோவிலுக்குச் சென்றுள்ளார்.
Samayam Tamil புரோகிதரே பொறுக்கித்தனமாக நடந்து கொண்டால் என்ன பயன்?: கஸ்தூரி காட்டம்
புரோகிதரே பொறுக்கித்தனமாக நடந்து கொண்டால் என்ன பயன்?: கஸ்தூரி காட்டம்


அப்போது கோவில் வளாகத்திலுள்ள முக்குருணி விநாயகருக்கு அர்ச்சனை செய்யும்படி தீட்சிதரிடம் பூஜை பொருட்களை கொடுத்துள்ளார். அந்த தீட்சிதர் வெறும் தேங்காயை மட்டும் உடைத்து விட்டு வந்து கொடுத்துள்ளார். இதை தட்டிக் கேட்ட லதாவை, தீட்சிதர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடேங்கப்பா... 144 கோடிக்கு வீடு வாங்கி அசத்திய ப்ரியங்கா சோப்ரா

ஒரு தீட்சிதர் இது போன்று செயலில் ஈடுபடுவது சரியா? அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளியே தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால் கோவிலில் கூட இல்லையா, ஒரு பெண் மேல் கை வைக்க அந்த தீட்சிதருக்கு யார் உரிமை கொடுத்தது என்று நெட்டிசன்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

'சபரிமலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை...': கஸ்தூரி ட்வீட்!

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். அதில், 'சிதம்பரம் கோவிலில், கடவுளின் சன்னிதானத்தில் ஒரு தீக்ஷிதர் மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ள காணொளி கண்டு அதிர்ச்சியடைந்தேன். புரோகிதம் செய்பவரே பொறுக்கித்தனமாக நடந்து கொண்டால் பிறகு யாரை சொல்லி என்ன பயன்?


கடவுளை, பணியிடத்தை, ஒரு பெண்ணை, பக்தையை, தமிழை , அனைத்தையும் அவமதித்து , சிரத்தையுடன் பணிபுரியும் மற்ற அர்ச்சகர்களும் அவமானத்தைத் தேடி தந்துள்ள அறிவிலிக்கு கோவிலுக்குள் பணி செய்யும் தகுதி இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் ட்வீட்டுக்கு பலரும் ஆதரவாக கமெண்ட் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்