ஆப்நகரம்

கவலை வேண்டாம் ஹீரோ ஏன் கவலையில் இருக்கிறார்?

ஆசை ஆசையாய் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜீவா.

TNN 3 Dec 2016, 10:48 am
ஆசை ஆசையாய் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜீவா. அதன் பிறகு தித்திக்குதே, ராம், கற்றது தமிழ் போன்ற நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கடைசியாக இவரது நடிப்பில் வந்த போக்கிரி ராஜா, திருநாள் போன்ற படங்களை தோல்வியை கொடுத்தது.
Samayam Tamil kavalai vendam hero jiiva is now sad
கவலை வேண்டாம் ஹீரோ ஏன் கவலையில் இருக்கிறார்?


இதன் காரணமாக டீகே இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடித்த கவலை வேண்டாம் படத்தை தான் முழுவதுமாக நம்பியிருந்தார். இப்படம் கடந்த மாதம் 24ம் தேதி திரைக்கு வந்த நிலையில், தற்போது படுதோல்வியடைந்துவிட்டதாம். என்ன தான் காமெடியாக இருந்தாலும், ஜீவாவிற்கு இப்படம் கை கொடுக்கவில்லையாம். இதன் காரணமாக கவலை வேண்டாம் படத்தில் நடித்த ஜீவா தற்போது கவலையில் இருந்து வருகிறார்.

ஹீரோவைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் கமிட்டாகி வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திலும், 2015ம் ஆண்டு வந்த இஞ்சி இடுப்பழகி படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படங்களுக்கு முன்பாக அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு ஏன் 2014ம் ஆண்டு வந்த ஜில்லா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். தற்போது கடந்த மாதம் வெளிவந்த கடவுள் இருக்கான் குமாரு படத்திலும் கடைசியில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் வந்திருப்பார். தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஜீவாவிற்கு இனிமேல் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், ஹீரோயின்களை போல் சிறப்புத் தோற்றம், ஹீரோவிற்கு அண்ணன், தம்பி இந்த மாதிரி ரோலில் நடிக்கும் நிலைமை வந்துவிடும் என்ற கவலையில் இருக்கிறாராம். இப்படத்தைத் தொடர்ந்து சங்கிலி புங்கிலி கதவ தொற, கீ, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்