ஆப்நகரம்

ஆதரம் இல்லாமல் நான் பேசவில்லை : கவுதமி

ஆதாராம் இன்றி நடிகர் கமல்ஹாசன் மீது புகார் கூறவில்லை என்று நடிகை கவுதமி கூறியுள்ளார்.

Samayam Tamil 27 Feb 2018, 11:03 pm
ஆதாராம் இன்றி நடிகர் கமல்ஹாசன் மீது புகார் கூறவில்லை என்று நடிகை கவுதமி கூறியுள்ளார்.
Samayam Tamil kavuthami actrsess says she has proof about salary
ஆதரம் இல்லாமல் நான் பேசவில்லை : கவுதமி

நடிகர் கமல்ஹாசனுடன் எனக்கு எந்த தொர்பும் இல்லை. எனக்கு அவர் பாக்கி வைத்து இருக்கிறார் என்று கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை கவுதமி கூறினார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுருந்த செய்தியில் , கமலுடன் இணைந்து செயல்பட்டபோது அவருடைய பட நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளாராக பணியாற்றினேன். வேறு பட அதிபர்கள் தயாரிப்பில் கம்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிமைப்பாளாரக இருந்தேன். அதன்மூலம் எனக்கு வருமானம் வந்தது.

கமல்ஹாசன் நடித்துள்ள தசாவதாரம், விஸ்வருவம் படங்களிலும் பணியாற்றினேன். ஆனால் அந்த படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை. அந்த பணம் எனது வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது.சம்பள பாக்கி வசூலிக்க பல முறை முயன்றும் கிடைக்கவில்லை என தெரிவித்து உள்ளார்.

சம்பள பாக்கி வைத்து இருப்பதாக கவுதமி கூறியுள்ள புகாரை கமல்ஹாசன் பட நிறுவனம் மறுத்து உள்ளது. விஸ்வரூபம் படத்தில் பணியாற்றியதற்காக கவுதமிக்கு கொடுக்க வேண்டிய முழு சம்பளமும் கொடுப்பட்டுவிட்டது என்றும் தசாவதாரம் நாங்கள் தயாரித்த படம் அல்ல என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டது.

கமல் சம்பள பாக்கி வைத்திருக்கிறார் என கவுதமி புகார் கூறியதற்கு எதிர்ப்பும் கிளம்பியது . இந்தநிலையில், நடிகை கவுதமி , ஆதரம் இல்லாமல் நான் எதுவும் பேச மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்