ஆப்நகரம்

தயாரிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்திய ஆனந்தி!

நடிகை ‘கயல்’ ஆனந்தி, தன்னுடைய சம்பளத்தை கூறி பட தயாரிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

TNN 28 Feb 2017, 6:08 pm
நடிகை ‘கயல்’ ஆனந்தி, தன்னுடைய சம்பளத்தை கூறி பட தயாரிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
Samayam Tamil kayal anandhi surprises film producers
தயாரிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்திய ஆனந்தி!


நடிகை ஆனந்தி, ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்திலேயே தனது மார்க்கெட் சூடுபிடிக்கும் என்று நினைத்திருந்தார். ஆனால் படம் வெற்றி பெற்றாலும் மற்ற பட வாய்ப்புகள் ஆனந்தியை தேடி வரவில்லை.

அதன்பிறகும் ஜி.வி.பிரகாஷ் தான் நடித்த அடுத்தடுத்த படங்களான ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகியவற்றில் நடிகை ஆனந்திக்கு வாய்ப்புக்கொடுத்தார். அவர் வாய்ப்பு கொடுத்ததற்குப் பிறகு அவரது மார்க்கெட் உயர்ந்தது. தற்போது ‘மன்னர் வகையறா’, ‘ரூபாய்’, ‘பண்டிகை’ என பல படங்களில் ஆனந்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘மன்னார் வகையறா’ படத்தில் பத்து முதல் பதினைந்து லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்தார். தற்போது முன்னணி டைரக்டர், நடிகர்களின் படம் என்றால் 25 லட்சம், பிரபலமில்லாத டைரக்டர், நடிகர்களின் படம் என்றால் 30 லட்சம் சம்பளம் தரவேண்டும் என்று கராராக கூறி வருகிறார். இதுவரை ஆனந்தியின் சம்பளத்தை தாங்களாகவே தீர்மானித்து வந்த தயாரிப்பாளர்களை நடிகை ஆனந்தி தற்போது வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்