ஆப்நகரம்

சென்னையில் திடீரென மரணமடைந்த பிரபல இயக்குனர்

அழைப்பிதழ், கேடயம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ள ராஜ்மோகன் என்ற இயக்குனர் சென்னையில் திடீரென மரணமடைந்துள்ளார்.

Samayam Tamil 2 May 2020, 5:34 pm
கொரோனா லாக்டவுன் காரணமாக மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். சினிமா துறையும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால் சினிமா பணியில் ஈடுபட்டு வரும் நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.
Samayam Tamil PK Rajmohan


அப்படி சென்னையில் தனியாக தனது வீட்டில் இருந்த இயக்குனர் ராஜ்மோகன் என்பவர் சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவர் சென்னியா நெசப்பாக்கம் பகுதியில் வன்னியர் தெருவில் வசித்து வந்தார். சொந்த ஊர் கோயம்பத்தூர். அழைப்பிதழ், கேடயம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் அவர்.

அவர் தனியாக இருப்பதால் தெரிந்த ஒருவரது வீட்டில் தான் தினமும் சாப்பிட்டு வந்திருக்கிறார். ஆனால் திடீரென அவர் வராமல் போனதால் அவர் சென்று பார்த்தபோது இயக்குனர் ராஜ்மோகன் இறந்து கிடந்துள்ளது தெரியவந்தது.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் அவர் இப்படி இருந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு திருமணமாகவில்லை என்பதால் தனிமையில் இருந்துள்ளார். உடன் யாராவது இருந்திருந்தால் மாரடைப்பு ஏற்பட்டபோது அவருக்கு மருத்துவ உதவி கிடைக்க வழி இருந்திருக்கும்.

அவருக்கு கொரோனா இருக்கிறதா என்றும் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்