ஆப்நகரம்

ஓவரா பந்தா காட்டும் கீர்த்தி சுரேஷ்!

ஓவரா பந்தா காட்டும் கீர்த்தி சுரேஷ்!

TOI Contributor 11 Dec 2016, 7:59 pm
நடிகை கீர்த்தி சுரேஷ் ‘ரஜினி முருகன்’ படம் மூலம் பிரபலமானவர். தற்போது விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தற்போது சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்தியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தெலுங்கில் அவர் நானிக்கு ஜோடியாக ‘நேனு லோக்கல்’ படத்தில் நடித்து வருகிறார்.
Samayam Tamil keerthi suresh indiscipline behavior in shooting spot
ஓவரா பந்தா காட்டும் கீர்த்தி சுரேஷ்!


ஆரம்பத்தில் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வந்தார். முதலில் எல்லாம் ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வந்த கீர்த்தி சுரேஷ் பவன் கல்யாண் படத்தில் ஒப்பந்தமானதில் இருந்து ஓவர் பந்தா காட்டுகிறாராம். படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறாராம். வந்து கேரவனுக்குள் செல்பவர் வெளியே எப்பொழுது வருவார் என்பது யாருக்கும் தெரியாதாம். அவர் வரும் வரை படக்குழு கேரவன் பக்கமாக வழி மேல் விழி வைத்து காத்துக் கிடக்கிறதாம்.

ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனதிற்கே இப்படியா என்று தெலுங்கு திரையுலகினர் கீர்த்தி மீது கடுப்பில் உள்ளார்களாம்.

After Committed Telugu Film With Pawan Kalyan Actress Keerthi Suresh Behavior Changed in Shooting Spot

அடுத்த செய்தி

டிரெண்டிங்