ஆப்நகரம்

இதற்கு தான் நான் பயங்கரமாக சிரித்தேன் : வெளிப்படையாக பேசிய கீர்த்தி சுரேஷ்!

இதற்கு தான் நான் பயங்கரமாக சிரித்தேன் : வெளிப்படையாக பேசிய கீர்த்தி சுரேஷ்!

TOI Contributor 4 Sep 2016, 10:20 pm
வாழ்நாளில் தான் பயங்கரமாக சிரிந்த நிகழ்வு எது என்பது பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil keerthi suresh open talk about her gossip
இதற்கு தான் நான் பயங்கரமாக சிரித்தேன் : வெளிப்படையாக பேசிய கீர்த்தி சுரேஷ்!


விஜய் உடன் பைரவா, தனுஷ் உடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரெமோ என வரிசையாக படங்களை வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் தமிழின் தற்போதைய முன்னணி ஹீரோயின். நடிகைகளைப்பற்றி கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளிவருவது சகஜமான ஒன்று தான். ஆனால் அதனை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப்பொறுத்தே பெரிதுபடுத்தப்படுகிறது. சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும், காமெடி நடிகர் சதீஷும் பைரவா பட பூஜையின் போது ஒன்றாக மாலை அணிந்து கொண்டு நின்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி கீர்த்தி சுரேஷ், சதீஷ் கல்யாணம் செய்து கொண்டார்களா என்று கிசுகிசுக்கப்பட்டது. இது பற்றி நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ், தன் வாழ்வில் பயங்ரமாக சிரித்தது அந்த புகைப்படம் குறித்து பேசப்பட்ட கிசுகிசு குறித்து தான் என்று கூறியுலள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்