ஆப்நகரம்

படப்பிடிப்பில் விஜய், சூர்யா, விக்ரம் பற்றி மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!

நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோர் படப்பிடிப்பில் நடந்து கொள்ளும் செயல் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.

Samayam Tamil 17 Feb 2018, 5:34 pm
நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோர் படப்பிடிப்பில் நடந்து கொள்ளும் செயல் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.
Samayam Tamil keerthy suresh says about vijay suriya and vikram
படப்பிடிப்பில் விஜய், சூர்யா, விக்ரம் பற்றி மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழைத் தவிர தெலுங்கிலும் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார்.



அண்மையில் இவரது நடிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து அவர் விக்ரமின் ‘சாமி2’, விஜய்யின் 62வது படம் என பிஸியாக நடித்து வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரைப் பற்றி கூறினார். ‘‘படப்பிடிப்பில் எப்போதும் விஜய் அமைதியாக இருப்பார். அவரை இதற்கு முன்பே நன்றாக தெரியும் என்பதால் இப்போது மிகவும் ஈஸியாக இருக்கிறது. அவரிடம் என்னால் எதையும் கேட்க முடியும்.. சூர்யா எப்போதும் அமைதி தான். எதையாவது கேட்டால் அதற்கு மட்டும் தான் பதில் கூறுவார். விக்ரம் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருப்பார் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்