ஆப்நகரம்

போதை பொருள் சர்ச்சை.. கீர்த்தி சுரேஷின் அப்பா சொன்ன அதிர்ச்சி புகார்

மலையாள சினிமா துறையிலும் பலர் போதை பொருள் பயன்படுத்துகிறார்கள் என நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பாவும் தயாரிப்பாளருமான சுரேஷ் குமார் அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.

Samayam Tamil 15 Sep 2020, 12:55 pm
தற்போது இந்தியா முழுவதும் பல சினிமா துறைகளை உலுக்கி வருகிறது போதைப் பொருள் சர்ச்சை. பாலிவுட், கன்னட சினிமா துறை பிரபலங்கள் பலர் கைதாகி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபர்த்தி போதை பொருள் வாங்கியது மற்றும் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், விசாரணையில் பல முன்னணி சினிமா நட்சத்திரங்களின் பெயர்களை அவர் கூறி இருக்கிறார் என தகவல் வெளியானது. ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் உள்ளிட்ட பல நடிகைகள் இதனால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள். மேலும் கன்னட சினிமா துறையிலும் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட பல நடிகைகள் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பல படங்கள் நடித்துள்ள நிக்கி கல்ராணியின் அக்கா தான் சஞ்சனா கல்ராணி.
Samayam Tamil Keerthy Suresh with Father Suresh Kumar


இந்நிலையில் இந்த போதைப் பொருள் சர்ச்சை பற்றி நடிகிய கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் குமார் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். மலையாள சினிமா துறையிலும் போதைப் பொருள் பயன்பாடு அதிகம் இருக்கிறது என அவர் கூறியிருப்பது அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.

ஷுட்டிங் நேரத்தில் கேரவனுக்குள் செல்ல முடியாத அளவிற்கு வாடை அடிக்கிறது என ப்ரொடக்ஷன் பையன்களை கூறும் அளவுக்கு மோசமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. அந்த அளவுக்கு போதை பொருள் பயன்பாடு இருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்த நடிகர் யார் என்பதை சுரேஷ் குமார் குறிப்பிடவில்லை. கன்னட சினிமாவை போலவே இங்கும் இந்த போதை கலாச்சாரம் அதிகம் இருந்தது என்றும் ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பில் இது பற்றி வெளிப்படையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்றும், அதற்கு பிறகு புகார்கள் எதுவும் வராமல் இருக்கிறது என சுரேஷ் குமார் கூறியிருக்கிறார். இருப்பினும் வழக்கமாக இது போன்ற போதை பார்ட்டி கலாச்சாரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பு பல்வேறு சினிமா துறை பிரபலங்கள் போதைப் பொருள் உட்கொண்டு அதன் பிறகு சில குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி அளித்த விவரங்களின் அடிப்படையில் ராகுல் ப்ரீத், சாரா அலி கான் உள்ளிட்ட நடிகைகள் விசாரணைக்கு Narcotics Control Bureau (NCB) சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அது பற்றி பேசிய NCB இணை இயக்குனர் கேபிஎஸ் மல்ஹோத்ரா, "அவர்களது பெயர்கள் வெளியாகி இருக்கலாம், ஆனால் நாங்கள் எடுத்து என்ன செய்ய இருக்கிறோம் என இப்போது கூற முடியாது" என தெரிவித்து உள்ளார். அதனால் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்மன் அனுப்புவது பற்றிய முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்