ஆப்நகரம்

இன்னொரு நாயகியாக ‘எரியும் கண்ணாடி’யில் களமிறங்கும் மலையாள நடிகை!

துல்கருக்கு ஜோடியாக நடித்த அபர்ணா கோபிநாத், தற்போது ‘எரியும் கண்ணாடி’ படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 28 Sep 2018, 3:45 pm
நகுல், சுனைனா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘எரியும் கண்ணாடி’. இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகியாக மலையாளத்தில் ‘ஏபிசிடி’, ‘சார்லி’ உள்ளிட்ட படங்களில் துல்கர் சல்மானுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்த அபர்ணா கோபிநாத் ஒப்பந்தமாகியுள்ளார். 10 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் நகுல், சுனைனா ஜோடி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.
Samayam Tamil Aparna-gopinath_


மேலும் படத்தில் மனிஷா கொய்ராலா, சுரேஷ் மேனன், அபர்ணா கோபிநாத், ரேவதி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சச்சின் தேவ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மலையாள சினிமாவின் வித்தியாசமான கதாநாயகி என பெயரெடுத்த அபர்ணா கோவிந்த், தமிழில் முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் கால்பதிக்க இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்