ஆப்நகரம்

நடிகைக்கு ஆதரவாக திரண்ட மலையாள திரையுலகம்!

நடிகைக்கு ஆதரவாக திரண்ட மலையாள திரையுலகம்!

TOI Contributor 19 Feb 2017, 10:32 pm
சமீபத்தில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மலையாள நடிகைக்கு ஆதரவாக மலையாள திரையுலகமே திரண்டுள்ளது.
Samayam Tamil kerala film fraternity rallies behind actor
நடிகைக்கு ஆதரவாக திரண்ட மலையாள திரையுலகம்!


மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகையை காரில் கடத்திய சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். விசாரணையில் நடிகையிடம் கார் ஓட்டுநராக பணியாற்ற நபரே இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து மூன்று பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையாள திரையுலகமே ஓரணியில் திரண்டுள்ளனர். மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் இன்னோசென்ட் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றார். மக்களவை உறுப்பினராக இன்னோசென்ட் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறியுள்ளார். இது குறித்து செய்தி அறிந்த முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நடிகர் பிரித்விராஜ், நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குநர் மேஜர் ரவி இது குறித்து பேசும் போது, அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை என்றார். நடிகர் உன்னி முகுந்தன், நடிகை ரீமா கல்லிங்கல் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்