ஆப்நகரம்

தன் ரசிகரின் உதவும் விருப்பத்தை நிறைவேற்றிய தோனி பட ஹீரோ - ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்து பெருமிதம்

கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக ரூ. 1 கோடியை தோனி பயோ பிக் திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் அளித்துள்ளார்.

Samayam Tamil 22 Aug 2018, 2:49 am
கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக ரூ. 1 கோடியை தோனி பயோ பிக் திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் அளித்துள்ளார்.
Samayam Tamil Sushant Singh Rajput


கேரளா மாநிலம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. அம்மாநில மக்களுக்கு உதவ பல மாநில அரசும்,பிரபலங்கள், பொதுமக்கள் என தங்களால் முடிந்த அளவு உதவி வருகின்றனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் ரசிகரின் கேள்வி:

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது முதல் அது தொடர்பான பல கருத்துக்களை தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்து வந்தார் சுஷாந்த். அவரின் புரஃபைல் படத்தை கூட கேரளா வெள்ளம் தொடர்பாக மாற்றியுள்ளார்.

இந்நிலையில், “பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அனைவரும் முடிந்த அளவு உதவ வேண்டும். குறைந்தபட்சம் அம்மக்களுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்” என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


இந்த பதிவிற்கு அவரின் ரசிகர்கள் பலர் தாங்கள் கொடுத்த நன் கொடை சம்பந்தமானவற்றை பகிர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் ஒரு ரசிகரோ, “சுஷாந்த் நானும் கேரளா மக்களுக்காக உணவு தயாரித்து வழங்க ஆசைப்படுகிறேன். ஆனால் என்னிடம் பணமில்லையே, நான் என்ன செய்ய ஏதாவது யோசனை கூறுங்கள்” என கேட்டிருந்தார்.

1 கோடி அளித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்:
இதையடுத்து நீங்கள் உதவி செய்ய விரும்புகிறீர்கள், அதனால் உங்கள் வங்கி கணக்கில் 1 கோடி ரூபாய் செலுத்துகிறேன். நீங்கள் செய்த உதவியும், தேவையான இடத்திற்கு உணவை கொண்டு சேர்த்த புகைப்படத்தையும் என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரவும்.


இந்த உதவி செய்ய தூண்டியதே நீங்கள் தான், உங்களுக்கு மிகுந்த நன்றி என தெரிவித்துள்ளார்.

11 படங்கள் :
சுஷாந்த் சிங் ராஜ்புத் இதுவரை 11 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதில் 9 படங்கள் மட்டும் வெளி வந்துள்ளன. 2 படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.

வெறும் 11 படங்களில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் 1 கோடி நிதியை நேரடியாக ரசிகரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி உதவியதற்கு அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்