ஆப்நகரம்

கொரோனாவால் அனைத்து தியேட்டர்களையும் மூட அரசு உத்தரவு: ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் அனைத்து சினிமா தியேட்டர்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 11 Mar 2020, 8:47 am
இந்தியாவில் மக்களுக்கு பெரிய பொழுதுபோக்கு விஷயமாக இருப்பது சினிமா மற்றும் டிவி தான். புதிய திரைப்படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு விடுமுறை நாட்களில் படையெடுப்பவர்கள் மிக அதிகம்.
Samayam Tamil Kerala Theaters to be closed till March 31, amid Corona fears


இந்நிலையில் தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவி வரும் காரணத்தால் அரசு திரையரங்குகளை ஒரு மாத காலத்திற்கு மூடுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை கேரளாவில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என அறிவித்துள்ளனர். இது சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பெரிய பாதிப்பு மலையாள படங்களுக்கு தான் என்றாலும், தமிழ் படங்களுக்கும் அதிக பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. ஏன் என்றால் கேரளாவில் மலையாள படங்களை விட தமிழ் படங்களே அதிக அளவில் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் ஈட்டுகின்றன. அதுவும் அடுத்த மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் மாஸ்டர் படம் ம்கப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதமும் தியேட்டர்கள் மூடப்படும் என கேரள அரசு அறிவித்தால் விஜய் படத்திற்கு மிகப்பெரிய வசூல் இழப்பு இருக்கும்.

அரசு நேற்று இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட உடனே கேரள விநியோகஸ்தர்கள் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் ஒரு அவசர கூட்டத்தை நடத்தியுள்ளனர். அதில் புதன் கிழமை முதல் தியேட்டர்களில் படம் திரையிட போவதில்லை எனவும், வரும் 13ம் தேதி முதல் மார்ச் மாத இறுதி வரை ரிலீஸ் ஆகவிருந்த படங்கள் புது ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.

மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'மரக்கார்: அரபிக்கடலிண்ட சிம்ஹம்' படம் வரும் மார்ச் 26ம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் அந்த படத்தின் ரிலீஸும் தள்ளி போகிறது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்