ஆப்நகரம்

தியேட்டர் உரிமையாளர் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார் முதல்வர்!

தியேட்டர் உரிமையாளர் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார் முதல்வர்!

TOI Contributor 7 Jan 2017, 6:02 am
கேரளா : கடந்த 23 நாட்களுக்கும் மேலாக முடங்கி கிடந்த மலையாள திரையுலக பிரச்னையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
Samayam Tamil kerala malluwood theatre strike going to end
தியேட்டர் உரிமையாளர் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார் முதல்வர்!


கேரள தியேட்டர் உரிமையாளர்கள், படங்களில் வசூலாகும் தொகையில் 50 சதவீதம் வேண்டும் என்றால் கேட்டனர். ஆனால் தயாரிப்பாளர்கள் 50 சதவீதம் வசூலை தரமுடியாது என்று சொல்லிவிட்டனர். இதனால் பல படங்கள் ரிலீசாகாமல் முடங்கின. இந்நிலையில் இந்த பிரச்னைக்கு தற்காலிக முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த பிரச்னையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தியேட்டர் உரிமையாளர்கள் தங்களின் போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த பிரச்னை குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்று பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார். இதற்கு தீர்வு காண விசாரணை கமிஷன் ஒன்றை அமைக்கவும் பரிந்துரை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள் படங்களை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வரை தற்போதுள்ள 40-60 சதவீதம் தொடர தியேட்டர் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்