ஆப்நகரம்

இப்படி ஒரு பாடகரா? - வாய்ப்பு தர தேடும் சங்கர்மகாதேவன்

விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற ‘உன்னை காணாது நான் இன்று’ என்ற பாடலை பாடி அசத்திய நபரை வாய்ப்பு தர தேடி வருகிறார் சங்கர மகாதேவன்.

Samayam Tamil 3 Jul 2018, 6:44 pm
விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற ‘உன்னை காணாது நான் இன்று’ என்ற பாடலை பாடி அசத்திய நபரை வாய்ப்பு தர தேடி வருகிறார் சங்கர மகாதேவன்.
Samayam Tamil sankar-mahadevan-4


விஸ்வரூபம் முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘உன்னை காணாது நான் இன்று’ என்ற பாடல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருந்தது. இந்த பாடலை பாடகர் சங்கர் மகாதேவன் பாடியிருந்தார்.

இந்த பாடலை கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவை கண்ட சங்கர் மகாதேவன், “இதுதான் மிகச்சிறந்த திறமை.
இவரின் அற்புதமான குரலில் பாடலை கேட்க இந்த நாட்டை நினைத்து மிக பெருமிதமாக உள்ளது. இவ்வளவு அருமையான திறமை உள்ள, கலாச்சாரத்தை உள்ள நாட்டை நினைத்து பெருமை படுகிறேன்.


சங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்டுபிடித்த கமல் - நேரில் அழைத்து பாராட்டு


யார் இவர்?, இவரை எப்படி கண்டுபிடிப்பது?
இவரை கண்டுபிடிக்க உதவுங்களேன், இவருடன் பணியாற்ற விரும்புகிறேன்.” என மி்க நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்