ஆப்நகரம்

கோடியில் புரளும் மலையாள நடிகர்களை சாடிய கேரள அமைச்சர்!

கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் மலையாள நடிகர்கள், தெலுங்கு நடிகர் பிரபாஸை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேரள அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.

Samayam Tamil 4 Sep 2018, 7:48 pm
கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் மலையாள நடிகர்கள், தெலுங்கு நடிகர் பிரபாஸை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேரள அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.
Samayam Tamil tourism minister


சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத கன மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானார் வீடுகளை இழந்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வந்தனர். அவர்கள் பழைய நிலைக்கு திரும்புவதற்கு கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு அமைப்புகளும், சினிமா பிரபலங்களும், தனிப்பட்ட மற்றவர்களும் பணமாகவும், உணவுப் பொருளாகவும் அனுப்பி வைத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் பிறந்த வளர்ந்த சினிமா நடிகர்கள் படத்துக்கு ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மிக குறைந்த அளவே நிவாரண தொகை அளித்துள்ளனர். அதை விமர்சிக்கும் வகையில் கேரள சுற்றுலா துறை அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் தற்போது பேசியுள்ளார்.

“கேரளாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தெலுங்கு நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடி, தமிழ் நடிகர்கள் விஜய் ரூ.70 லட்சம், சூர்யா, -கார்த்தி, லாரன்ஸ் ரூ. 1 கோடி, விஜயகாந்த் ரூ. 1 கோடி - என பலரும் கோடிக்கணக்கில் நிவாரண தொகை வழங்கியுள்ளனர். ஆனால் கேரளாவில் பிறந்து வளர்ந்து நடிகர்களாக இருக்கும் நீங்கள் படத்துக்கு ரூ. 3 முதல் 4 கோடிவரை சம்பளம் வாங்குகிறீர்கள். நீங்கள் அவர்களை விட இன்னும் அதிகமாக கொடுத்திருக்க வேண்டாமா” என அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் சூசகமாக பேசியுள்ளார்.

இந்த விஷயத்தில் நீங்கள் அனைவரும் ‘‘நடிகர் பிரபாஸை ரோல் மாடலாக நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்’’ என மலையாள நடிகர்களைப் பார்த்து அமைச்சர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்