ஆப்நகரம்

நகைகளை அடகு வைத்து இயக்கிய படத்தை சிறந்த படமாக தேர்வு!

பிரபல இயக்குனர் ஷரீப், தன்னுடைய மனைவியின் நகைகளை அடகு வைத்து இயக்கிய படத்தை கேரள அரசு சிறந்த படமாக தேர்வு செய்துள்ளது.

Samayam Tamil 4 Mar 2019, 5:40 pm
தற்போது சினிமா படங்களை தயாரிப்பதும், அப்படியே தயாரித்தாலும் அதை வெளியிடுவது லேசான காரியமல்ல. இன்றைய காலகட்டத்தில் அப்படித்தான் பல தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். அப்படியாக கஷ்டப்பட்டவர்களில் ஒருவர் பிரபல மலையாள பட இயக்குனர் ஷரீப் ஈசா.
Samayam Tamil kerala-award


சமீபத்தில் இவர் ‘தி லவர் ஆப் கலர்ஸ்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இந்தப் படத்தை தயாரிக்க இயக்குனர் ஷரீப் ஈசா, தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து அதை வைத்து அந்தப் படத்தை தயாரித்து முடித்துள்ளார். தற்போது இந்தப் படத்திற்கு கேரள அரசு சிறந்த படமாக தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது.

இதன் குறித்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஷரீப் ஈசா கூறுகையில், ‘‘ இந்தப் படத்திற்கு கேரள அரசு விருது வழங்கியது எனக்கு பெருமையளிக்கிறது. படத்தை பெரிய பண நெருக்கடிக்கு இடையில் தான் முடித்தேன். ரூ. 5,000,00த்தில் எடுக்க முடிவு செய்து பின் ரூ. 20 லட்சத்திற்கு எகிறியது. படத்தை முதலில் தயாரிப்பாளர் பாதியில் நிறுத்தி என்னால் இதுக்குமேல் முடியாது என்று கையை விரித்து விட்டார்.

இதனைத்தொடர்ந்து என் மனைவியின் நகைகளை அடகு வைத்தும் மற்றும் வங்கியில் லோன் வாங்கியும் இந்த படத்தை எடுத்தேன்’’ என்றார் இயக்குனர் ஷரீப் ஈசா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்