ஆப்நகரம்

பிரபல பாடகி என் அம்மா, ரூ. 50 கோடி வேண்டும்: வழக்கு தொடர்ந்த கேரளா பெண்

பிரபல பின்னணி பாடகி அனுராதா பட்வால் தன் அம்மா என்று கூறி, ரூ. 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Samayam Tamil 3 Jan 2020, 4:08 pm
கேரளாவை சேர்ந்தவர் கர்மலா மாடெக்ஸ்(45). அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Samayam Tamil anuradha paudwal


அந்த மனுவில் கர்மலா கூறியிருப்பதாவது,

பிரபல பாடகி அனுராதா பட்வால், அருண் பட்வாலின் மகள் நான். நான் பிறந்து நான்கு நாட்களில் அவர்கள் என்னை பொன்னச்சன் மற்றும் ஆக்னஸிடம் கொடுத்துவிட்டார்கள். இருவரும் பிசியாக இருப்பதால் என்னை வளர்க்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்களாம்.

என்னை வளர்த்த பொன்னச்சன் தான் இறக்கும்போது நான் அனுராதா பட்வாலின் மகள் என்பதை கூறினார். என்னை வளர்த்த ஆக்னஸுக்கு அல்ஸீமர் நோய் இருப்பதால் அவருக்கு இது குறித்து தெரியாது. எனக்கு அனுராதா ரூ. 50 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தர்பார் பட வில்லன் மகளை காதலிக்கும் கிரிக்கெட் வீரர் கே. எல். ராகுல்

பொன்னச்சன், ஆக்னஸுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். கர்மலாவை நான்காவது பிள்ளையாக வளர்த்துள்ளனர். கர்மலா அனுராதாவை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் கர்மலாவின் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அனுராதா கூறியிருப்பதாவது, முட்டாள்த்தனமான விஷயங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்பில்லை என்றார்.

மஹா போஸ்டரில் கெத்து காட்டும் சிம்பு: அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்...

அனுராதா, அருண் தம்பதிக்கு ஆதித்யா என்கிற மகனும், கவிதா என்கிற மகளும் உள்ளனர். அருண் தற்போது உயிருடன் இல்லை. அனுராதா கடந்த 2017ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்