ஆப்நகரம்

ரஜினியுடன் லெக்ஃபி, காலால் கை குலுக்கிய கேரள இளைஞர்: வைரல் போட்டோ

கேரளாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரணவின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

Samayam Tamil 3 Dec 2019, 9:06 am
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் பிரணவ். அவருக்கு பிறவியிலேயே கைகள் இல்லை. ஆனால் அதை அவர் ஒரு குறையாகவே நினைக்காமல் தன்னம்பிக்கையுடன் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து வருகிறார்.
Samayam Tamil rajinikanth


கால்களால் ஓவியம் வரைவது, செல்போனை பயன்படுத்துவது, சைக்கிள் ஓட்டுவது என்று அசத்தும் பிரணவ் அண்மையில் கேரள முதல்வர் பினரயி விஜயனை சந்தித்து பேரிடர் நிவாரண நிதிக்கு தன்னால் முடிந்த தொகையை அளித்தார்.

அப்பொழுது பினரயி விஜயன் பிரணவின் காலை குலுக்கியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது. மேலும் பிரணவ் தனது கால்களால் பினரயி விஜயனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அதை லெக்ஃபி என்றார்கள்.

பிரணவுக்கு ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என்று ஆசை. இது குறித்து அறிந்த ரஜினிகாந்த் பிரணவை சந்திக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில் பிரணவ் ரஜினியை சந்தித்து 20 நிமிடங்கள் பேசியுள்ளார். பினரயி விஜயனை போன்றே ரஜினியும் பிரணவின் காலை பிடித்து குலுக்கியபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.


Sivakarthikeyan விஜய் இல்லை சிவகார்த்திகேயன் தான் 'டாக்டர்'

பிரணவ் ரஜினியை ஓவியமாக வரைந்து அவருக்கு பரிசளித்துள்ளார். மேலும் ரஜினியுடன் சேர்ந்து லெக்ஃபி எடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக பிரணவ் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உருக்கமான போஸ்ட் போட்ட மைனா நந்தினி: கண்ணில் தண்ணி வச்சுண்ட ரசிகர்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்