ஆப்நகரம்

வசூலில் சாதனை படைத்த ‘கே.ஜி.எப்.’ படத்திற்கு தமிழில் வசனம் எழுதியது இவர் தானாம்!

வசூல் சாதனை புரிந்த ‘கே.ஜி.எப்.’ படத்திற்கு தமிழில் வசனம் எழுதியவர் விஜய் சேதுபதியின் நண்பர் நாகராஜ்தானாம்.

Samayam Tamil 23 Feb 2019, 10:09 pm
வசூல் சாதனை புரிந்த ‘கே.ஜி.எப்.’ படத்திற்கு தமிழில் வசனம் எழுதியவர் விஜய் சேதுபதியின் நண்பர் நாகராஜ்தானாம்.
Samayam Tamil kgf


பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி, ஆனந்த் நாக் உட்பட பல கன்னட நடிகர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கே.ஜி.எப்.’. இப்படம் தமிழை தாண்டி, இந்தியிலம் டப் செய்யப்பட்டு வெளியானது. படம் வெளியானபோது எந்தவித எதிர்பார்ப்பும் படத்திற்கு இல்லை. படம் வெளியாகி இரண்டு நாட்கள் தாண்டியபிறகுதான் ரசிகர்களிடம் பிரபலமாகியது. மேலும் படத்தின் கதை, வசனம் தாறுமாறாக இருக்கும் படத்தை பார்க்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற வசனங்கள் எல்லாம் மீம்ஸ்களாக அதிகம் வருகிறது. இப்படி வைரலாக பேசப்படும் இப்படத்தின் வசனம் யார் எழுதியது என்று கேட்டால் அசந்து போய்விடுவீர்கள். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதி அடிக்கடி கட்டிப்பிடிக்கும் நாகராஜ் தான் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளாராம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்